Sunday, September 21, 2008

Vairamuthu in Iruvar

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே 
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் 
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம் 
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம் 
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் 
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது ஞ்யாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை 
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை 
அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணிந்தாய்  
ஆடை களைந்தேன் வெட்கத்தினை நீ அணிந்தாய் 
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும் 
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி  
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்  
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!